Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கோவை வந்தே பாரத்! என்னா ஸ்பீடு.. பிளேனே தோத்துரும்.. பயணிக்கும் ஆர்வத்தில் ஏதேதோ சொன்ன வானதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொங்கி வைக்கும் நிலையில், அதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார். இது குறித்து அவர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதமர் மோடி பெரிதும் எதிர்பார்க்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொங்கி வைத்தார். வந்தே பாரத் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில், தானியங்கி கதவுகள், அதிவேக வைபை உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

BJP Vanathi Srinivasan compares Vande Bharat with China bullet train

சென்னை கோவை வந்தே பாரத்: வரும் காலங்களில் நாட்டில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இருக்கும் நிலையில், இரண்டாவது ரயிலாக சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது

சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொங்கி வைக்கும் நிலையில், அதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "முதல் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ரயில் பயணம் என்பது எப்போதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடியது.

இது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே மகிழ்ச்சியை தருகிறது. நான் கோவை எம்எல்ஏவாக இருக்கும் போது, தமிழகத்திற்குள் இயங்கும் இந்த சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை இயக்கியது மிகவும் மகிழ்ச்சி. முதல் நாளில் பயணிப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

BJP Vanathi Srinivasan compares Vande Bharat with China bullet train

நான் 2016ஆம் ஆண்டு சீனா சென்ற போது, அங்குள்ள புல்லட் ரயிலிலும் சென்றுள்ளேன். புல்லட் ரயிலில் பயணிக்கும் போது, என மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. நமது நாட்டில் எப்படி இதுபோன்ற அதிநவீன ரயில்களை வரும் என்று நினைத்து ஏங்கினேன். இப்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது.

அதிலும் நம்ம பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் தான் இந்தியா முழுக்க செல்கிறது என்பது நமக்கு கூடுதல் பெருமை. இதில் வைபை தொடங்கி பல்வேறு வசதிகள் இருக்கிறது. இரவில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களும் மிக விரைவில் வரவுள்ளது.

விமான நேரத்திற்கு இணையாக அதே வசதிகளுடன் இந்த வந்தே பாரத் இருக்கிறது. வீட்டில் அமர்ந்து புக் படித்துக் கொண்டே செல்வது போலவே இந்த வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறது" எனறார்.

வந்தே பாரத் ரயில் மற்றும் ஏற்கனவே சென்னையில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிடையே பெரிய நேர வித்தியாசம் இல்லை. மிஞ்சிப்போனால் 45 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம்தான் வித்தியாசம். எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுதல் ஸ்டேஷனில் நின்று செல்வது தாமதத்திற்கு மற்றும் ஒரு காரணம். வந்தே பாரத் அத்தனை ஸ்டேஷன்களில் நிற்பது கிடையாது. கூட்டி கழித்து பார்த்தால், மணிக்கு 83 கி.மீதான், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம். ஆனால் விமானத்திற்கு ஈடாக இந்த வந்தே பாரத் ரயில் கோவையை சென்று சேரும் என்று வானதி சீனிவாசன் சொன்னதும், அதிவேகமாக பயணிக்க கூடிய புல்லட் ரயிலை இதனுடன் ஒப்பீடு செய்ததும் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+