சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன்: சென்னை மாநகராட்சி ஆலோசனை!
சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்க சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

ரூ.10,000 வரை கடன்
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பணி மூலதன கடனாக ரூ.10,000 வரை வழங்கும் திட்டம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் பாரத பிரதமரின் ஆத்ம நிற்பார் நிதி(சுயசார்பு) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.

தவணை முறை
இந்த கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு தவணை முறையில் திருப்பி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒருமுறை 7 சதவிதம் வட்டி மானியமும், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்க தொகையாக மாதம் ரூ.100 வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மணடலங்களில் தினசரி 30 முதல் 40 எண்ணிக்கையில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பபம் செய்து வருகின்றனர்.

உரிய நடவடிக்கை
இந்த நாள் வரை 94,430 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 35,398 விண்ணப்பங்கள் வங்கிகள் மூலம் கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 29,706 சாலையோர வியாபரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வங்கி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது உறுதி செய்யவும் ஒரு சில காரணங்களுக்காக கடன் தொகை அனுமதிக்க இயலாமல் வங்கிகளால் திருப்பப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்து அவர்களுக்கும் கடன் தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொளளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சாலையோர வியாபாரிகள்
மேலும், வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் தொகையை விரைவாக வழங்க வங்கி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications