சென்னையில் வீடு தேடி வரும் ரூ.5000 அபராதம்.. இன்றே கடைசி நாள்.. பொதுமக்களே உடனே லைசென்ஸ் வாங்குங்க
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய் - பூனைகளை வீட்டில் வளர்த்தால் அதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை பெற இன்று கடைசி நாளாகும். இல்லாவிட்டால் நாளை முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும்.
நம் நாட்டில் தெருநாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடந்து செல்வோரை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. சமீபத்தில் கூட தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு பெரும் கவனம் பெற்றது.

மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி வளாகத்தின் அருகே சுற்றி திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். தெருநாய்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இதற்கிடையே தான் சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்பது தான் அந்த தீர்மானம்.
மேலும் இது நடைமுறைக்கும் வந்துள்ளது. நவம்பர் 24ம் தேதிக்குள் நாய், பூனை வளர்ப்பதற்கு லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று லைசென்ஸ் பெற கடைசி நாள். வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் இன்றைக்குள் லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாளையில் இருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும்.
அதாவது அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்து லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர். கடைசி நாளான இன்று சென்னையில் லைசென்ஸ் பெற தனி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பூனை, நாய்களுக்கான லைசென்ஸ், மைக்ரோசிப்பிங் மற்றும் தடுப்பூசியை பெற முடியும். அதன்படி மணலி தேவராஜன் தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், சுராபேட்டை சண்முக புரத்தில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால் உள்ளிட்ட இடங்களில் இன்று முகாம் நடைபெற உள்ளது.
அதேபோல் அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைந்துள்ள காமராஜர்புரம் தன்லப் மைதானம், கீழ்பாக்கம் கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், ஆலப்பாக்கம், மாந்ததோப்பில் உள்ள கவுன்சிலர் அலுவலகம், வேளச்சேரி (மேற்கு) வார்டு 175 ல் 22வது கிராஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் நகர் கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், மடிப்பாக்கம் மைலை பாலாஜி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால் உள்ளிட்டவற்றில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி சார்பில் முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications