சென்னை ஈசிஆரில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை - மாமல்லபுரம் இடையேயான சாலையின் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்கிறது.
இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாக செல்லும் வகையில் பல்வேறு பெயர்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகள் மக்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது.

இந்நிலையில் தான் நெடுஞ்சாலைகளை பராமரிப்புக்கான செலவுக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து டோல் கட்டணம் எனும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுங்கக்கட்டணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு குறிப்பிட்ட தொகை உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் தற்போது சென்னை ஈசிஆரில் அக்கரை- மாமல்லபுரம் இடையேயான சாலையை பயன்படுத்துவதற்கான சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்று ஈசிஆர் எனும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே 30 கிலோமீட்டர் தொலைவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்த சுங்கக்கட்டணம் என்பது திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி கார், ஜீப், மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.68 வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது. இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் 110 வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது. இந்த அதிகரிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications