சென்னை மக்களின் கவனத்திற்கு! எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு.. புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருவதால், புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே புறநகர் மின்சார ரயில் பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் இன்று முதல் 18ஆம் தேதி வரை, இரவு 9 மணி தொடங்கி அதிகாலை 5 மணி வரை 8 மணி நேரத்திற்கு 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 6வது நடைமேடையிலும் மறு மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 5வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதேபோல சில மின்சார ரயில் சேவைகள் பகுதி நேரமாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இன்று தொடங்கி 18ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8:55 மணிக்கு, 10:20 மணிக்கு மற்றும் 11:30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9:05க்கு, 10:10க்கு, 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல இன்று மற்றும் 15ம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9:30 மணிக்கு, 10 மணிக்கு மற்றும் 11:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10 மணி, 11 மணி, மற்றும் 11:40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications