வரவேண்டாம்.. கேட்டுக்கொண்ட முதல்வர்.. மீறி படையெடுத்த மக்கள்.. சென்னை புறநகரில் கடும் டிராஃபிக்!
சென்னை: சென்னையை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்த 2-3 நாட்களுக்கு வர வேண்டாம் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையிலும் மக்கள் தொடர்ந்து சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது.
இன்றும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை
அதேபோல் தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே மழை தொடங்கிவிட்டது. சென்னையிலும் மழை பெய்து வருகிறது.

சென்னை
சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் மழைக்கு இடையிலும் சென்னையை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரும்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சென்னையில் இன்று அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தனியார் அலுவலகங்கள் முடிந்த அளவு விடுமுறை அல்லது வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
Recommended Video

தனியார்
ஆனாலும் இன்று சென்னையில் பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை நோக்கி திரும்ப தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை நோக்கி செல்லும் சில ரயில்கள் வெள்ளம் காரணமாக முந்தைய நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அவதி
இதனால் மக்கள் பலர் உரிய நேரத்தில் சென்னை செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ள நிலையில் சென்னைக்கு அடுத்த 2-3 நாட்களுக்கு வர வேண்டாம் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையிலும் மக்கள் தொடர்ந்து சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications