பொங்கல் பரிசு முதல் கிளாம்பாக்கம் வரை அடுத்தடுத்து அரசு ஏற்றுக்கொண்ட 3 முக்கியமான விஷயங்கள்
சென்னை: சென்னை வெள்ளம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொங்கல் பரிசு வரை மக்கள் வைத்த முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பதை பலரும் வரவேற்கிறார்கள். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஒரு நல்ல அரசு என்பது விமர்சனங்களையும், மக்கள் சொல்லும் குறைகளையும் கண்டு அதனை உடனடியாக சரி செய்வது தான். அந்த வகையில் கடந்த டிசம்பரில் இருந்து எதிர்பார்க்காத வகையில் பல சவால்களை சந்தித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கிட்டத்தட்ட 2015ல் ஏற்பட்டதை விட அதிகம்.. மிக கடுமையான பாதிப்பை சென்னை சந்தித்தது.

அப்போது பொதுமக்களுக்கு அரசு வெள்ள நிவாரணம் அறிவித்தது. இதன்படி, சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 6000 நிவாரணம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படியே நிவாரணம் வழங்கியது. அதேநேரம் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆய்வு செய்து விட்டு தரப்படும் என்றும் அறிவித்தது.
அதேநேரம் வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள், நீண்ட காலமாக சென்னையில் வசிக்கும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்கப்படாததால் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அவர்களுக்கு வெள்ள நிவாரணம் அளிக்கப்படும் என்று தனது நிலைப்பாட்டை மாற்றி அறிவித்தது. 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் அவர்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டாவது விஷயம் கிளாம்பாக்கம்: டிசம்பர் 30ம் தேதி திடீரென சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அந்த பேருந்து நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை மக்கள் கூறினார்கள். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்ததற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொண்ட விமர்சனங்களும், எதிர்ப்புகளும் மிக அதிகம். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. நீண்ட தூரம் தான். வடசென்னை மக்களுக்கு செட் ஆகவில்லை என்பது தான்.
இன்னொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்காதது தான். அதை அமைக்க வேண்டியது தெற்கு ரயில்வே ஆகும். இந்நிலையில் தமிழக அரசு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் திறக்கப்பட்டால், உண்மையில் மக்களுக்கு மிகப்பெரிய பலனாக இருக்கும். ஏனெனில் பீச்சில் ஏறினால் கோயம்பேட்டை விட வேகமாக கிளாம்பாக்கம் மக்கள் வர முடியும். மேலும் கிளாம்பாக்கத்தில் மக்கள் கூறிய குறைகளை ஏற்று அரசு அங்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது,.
மூன்றாவது விஷயம் பொங்கல் பரிசு... முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 5ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், "பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோருக்கும், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு இல்லை என்று அறிவித்தது விமர்சனங்கள் எழுந்ததது. அவர்களுக்கும் பொங்கல்பரிசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து வருமான வரி கட்டுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் உள்பட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மக்கள் வைத்து மூன்று கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டிருப்பதை பலரும் வரவேற்கிறார்கள்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications