தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை! சென்னையில் விடிய விடிய மழை! குளு குளு சிட்டியான தலைநகர்
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய மழை பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 22, 23ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications