சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்.. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யபட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும், இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கொண்டு விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Chennai HC has orderd the TN govt to file a detailed report on the disappearance of documents related to 41 idol smuggling cases across the state

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது யானை ராஜேந்திரன் சார்பில், ஆவணங்கள் காணாமல் போகவில்லை எனவும் அவை அகற்றபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை 29 சிலைகள் மீட்கப்பட்டு பலர் கைது செய்ய பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் காணாமல் போனதாக கூறி வழக்கை விசாரித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியே இந்த வழக்குகளை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலம்: உங்க மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. பாஜகவிற்கு சேகர்பாபு பதிலடி! விநாயகர் சிலை ஊர்வலம்: உங்க மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. பாஜகவிற்கு சேகர்பாபு பதிலடி!

எனவே இது முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கடந்த 1983, 1984, 1989, 1992 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சம்மந்தமான ஆவணங்கள் தான் காணாமல் போனதாகவும், இதில் 23 ஆவணங்கள் தற்போது கண்டுபிடிக்கபடுள்ளதாகவும், 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆவணங்கள் காணாமல் போன 41 வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் யார்? யார்? எனவும் காணமால் போன ஆவணங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

English summary
The Chennai High Court has ordered the Tamil Nadu government to file a detailed report on the disappearance of documents related to 41 idol smuggling cases across the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X