தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா எனபது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications