Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக "இப்ராஹிம்" சொல்ல சொல்ல கேட்கலையே.. இப்ப என்னாச்சுன்னு பாருங்க.. ஹைகோர்ட் போட்ட போடு..!

வேலூர் இப்ராஹிமுக்கு அபராதம் விதித்தது சென்னை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்க போகிறது.. இதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாய் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் பாஜக இந்த முறை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது.. எனவே, அதிகப்படியான இடங்களை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

 இப்ராஹிம்

இப்ராஹிம்

அதனால், பாஜகவை சேர்ந்த அத்தனை தலைவர்களும் தமிழகம் முழுவதும் படுபிஸியாக பிரச்சார களமிறங்கி உள்ளனர்.. அந்த வகையில், கோவை போத்தனூர் 95 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்திருந்தார்.. ஆனால், அந்த சமயத்தில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து உடனே கிளம்பி செல்லும்படி சொன்னார்கள்..

 கைது

கைது

அதற்கு, தான் இங்கு வந்ததே பிரச்சாரம் செய்வதற்குதான் என்றும், அதை யாரும் தடுக்கக் கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.. இதனால் வேறுவழியின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இறுதியில் பிரச்சாரத்திற்கு சென்றபோதே 3-வது முறையாக அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணை

விசாரணை

எனவே, தன்னை பிரச்சாரங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோரட்டில் வேலூர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் பல விவரங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

 தள்ளுபடி

தள்ளுபடி

"மனுதாரருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், பதட்டமான பகுதிகள் செல்லக்கூடாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால், வழக்கில் இது போன்ற பல தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறினார்... இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தவறான தகவலை அளித்து கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.. அத்துடன், மனுதராருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த தொகையை 15 நாட்களில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+