நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கிச் செல்வார்கள்- சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கிச் செல்வார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியை தூக்கிப் பிடிப்பவர்கள், அதை கைவிட மாட்டார்கள்.

நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா. இந்த விவகாரத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவுக் கொள்ளும். இந்த வழக்கில் வரும் 14 ஆம் தேதிக்குள் அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications