வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் செம்ம.. சென்னை ஐசிஎப் சனிக்கிழமை அனறு செய்த தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலை 25-வது வந்தே பாரத் ரயிலை நேற்று வெற்றிகரமாக தயாரித்து வழங்கி இருக்கிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் ரயில்கள் தான் இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

25வது வந்தே பாரத் ரயில்களை தயாரித்து நாட்டுக்கு வழங்கிய ஐ.சி.எஃப் அதிகாரிகளையும், ரயில் பெட்டி தயாரிப்பு ஊழியர்களை ரயில்வே துறை உயரதிகாரிகள் நேற்று வெகுவாக பாராட்டினார்கள்.

Chennai ICF successfully manufactured and delivered the 25th Vande Bharat train yesterday

இந்தியாவிற்கு ரயில்களை தயாரித்து அனுப்பும் தொழிற்சாலை என்றால், அது சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை தான். இந்த ஐசிஎப் தொழிற்சாலை உலகப்புகழ்பெற்றவை. இந்தியாவில் இன்று ஓடும் எத்தனையோ ரயில்கள் இங்கு தான் தயாரிக்கப்பட்டவை. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டிலேயே அதிவேகத்தில் இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கப்போவதாக அறிவித்தது. அந்த ரயிலை தயாரிக்கும் பொறுப்பு சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

இதன்படி முதல் வந்தே பாரத் ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'ரயில் 18' என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2019-ல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கியது.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 115 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆர்டர் கிடைத்துள்ளது. இதுவரை 25 வந்தே பாரத்ரயில்கள் தயாரிக்கப்பட்டு, ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்று தான் 25 வது வந்தே பாரத் ரயில் தயாரித்து ஒப்படைக்கப்பட்டது.

சென்னை ஐசிஎப் இல் 16 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை 180 கி.மீ. வேகத்தில் இயக்க சோதனை செய்யப்பட்டு, 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, டெல்லி-ஆக்ரா இடையே அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூர் இடையேவும், சென்னை-கோவை இடையேவும், திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேவும் தலா ஒருவந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மெட்ரோ வந்தே பாரத் ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் ஐசிஎப் இல் திட்டமிடப்படுள்ளது,

2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+