கிராம கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 2700 நிதி உதவி.. எப்படி பெறலாம்.. முழு விவரம்
சென்னை: கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை மூலம் புராதனமான கிராம கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி ரூ.2,700 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 168 சிவாச்சாரியார், 149 பட்டாச்சாரியார், 185 பூசாரிகள் என மொத்தம் 502 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் ரூ. 2700 நிதி உதவி பெற விரும்பும் கிராம கோவில் அர்ச்சகர்கள் விண்ணப்பிக்கலாம்
கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை மூலம் புராதனமான கிராம கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி ரூ.2,700 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. தற்போது 168 சிவாச்சாரியார், 149 பட்டாச்சாரியார், 185 பூசாரிகள் என மொத்தம் 502 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு (2025) நடைபெறும் வாய்மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி பெற விண்ணப்பம் செய்பவர்கள், அறக்கட்டளை மூலம் அனுப்பப்படும் புத்தகத்தில் உள்ள ஸ்ரீசுவாமிகள் குறிப்பிட்ட பூஜை முறைகளை நன்கு படித்து, அதன்படிதான் பூஜை செய்ய வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முற்பட்டதலிருந்த இந்த கோவில்களில் முறையின்றி அவரே பூஜை செய்தல் அவசியம். விண்ணப்பதாரர் மாத வருமானம் ரூ.7,500-க்கு மிகாமல் இருக்க வேண்டு்ம். நிதி உதவி பெற, விண்ணப்ப படிவம் பெற விரும்புபவர்கள் தங்களது வேண்டுகோள் கடிதத்தை அக்டோபர் 30-ந் தேதிக்குள், 'கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை, எண்.16, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர்புரம், சென்னை- 600 085' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000-க்கும் கீழ் மட்டுமே ஆகும். இதில் 12,959 திருக்கோயில்களில் 'ஒரு கால பூஜைத்திட்டம்' அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் தமிழக அரசால் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications