கோயம்பேடு ரோடு ரோலர்.. மனைவியுடன் சென்ற மாற்றுத்திறனாளிக்கு எமனாகியது.. ஒப்பந்ததாரர் மீது ஆக்ஷன்
சென்னை: சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளிக்கு எமனாக மாறியது.இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரோடு ரோலர்களை இயக்குவோர் சற்று கவனக்குறைவாக இருந்தால், ரோடு போடும் போது, சாலையில் வைத்து அப்படியே யாரையாவது நசுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சில மாதங்கள் முன்பு மதுரையில் நடந்தது. மதுரையில் கடும் வெயிலின் காரணமாக ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த கட்டிட சூப்பர்வைசர் கடந்த ஜூன்மாதம் உயிரிழந்தார். ரோடுரோலருக்கு அடியில் சூப்பர் வைசர் அமர்ந்திருந்த போது, அந்த நேரத்தில் திருமண மண்டபத்தில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்தது. இதனால் கீழே உட்கார்ந்திருந்த இன்ஜினியர் கத்தியது, ரோடு ரோலரை இயக்கியவருக்கு கேட்கவே இல்லை.. அதேபோல் ஒருசம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளியான பாஸ்கர ராஜா மீது வேகமாக மோதியது. இதில், மாற்றுத்திறனாளி பாஸ்கர் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரோடு ரோலர் டிரைவரான வெங்கடேசன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, 127-வது வார்டு உதவி என்ஜினீயர் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் எந்தவித சாலைப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications