சூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..!
சென்னை சட்டகல்லூரி மாணவர்கள் ஆக்சிஜன் ஆட்டோ சேவையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை: ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு, ஆக்ஸின் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..!
இதில், சென்னையில் இந்த நிலைமை மோசமாக உள்ளது.. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்கள் கிடைப்பது இல்லை.. பல மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது..!

ஆட்டோ
இந்த சிரமத்தை போக்க, ஒருசிலர் தாங்கள் ஓட்டிவரும் ஆட்டோக்கள், வேன்கள் மூலம் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள வருகின்றனர்.. இலவசமாகவே இந்த பணியை மேற்கொண்டுள்னர்.. கொரோனா பாதிக்காத வகையில் முழு கவச உடையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகளை, உரிய மருத்துவமனையில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறார்கள்.

ஆக்சிஜன்
இதில் அடுத்தக்கட்டமாக, சட்டக்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர்..

செல்போன்
இவர்கள் "வியாசை தோழர்கள்" என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.. 24 மணி நேரமும் இலவச சேவை செய்து வருகிறார்கள்.. ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்லாமல், உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசர தேவைக்கு தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 9791858078, 7305738473 என்ற செல்போன் நம்பர்களையும் தெரிவித்துள்ளனர்.

பாராட்டு
இதன்மூலம் ஏராளமானார் சென்னையில் நேரடி பலன்பெற்று வருகிறார்கள்.. தமிழக அரசு, ஒரு பக்கம் பல நிவாரண பணிகளை செய்து வந்தாலும், தானாக முன்வந்து, மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு உதவும் இந்த வியாசர்பாடி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..!












Click it and Unblock the Notifications