அதிர்ச்சி.. விஷவாயு தாக்கியதால் அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளிகள்! ஒருவர் பலி.. மற்றவருக்கு சிகிச்சை
சென்னை: வடசென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை அடைப்பை சரிசெய்தபோது விஷ வாயு தாக்கி 26 வயது தொழிலாளி ஒருவர் பலியானார். இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (வயது 26). இவர் சென்னையில் மாதனான்குப்பத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் ஜெட்ராட் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வடசென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பை ஜெட்ராட் இயந்திரம் மூலம் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது.

விஷவாயு தாக்குதல்
இதையடுத்து பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஜெட்ராட் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது நெல்சன் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே எட்டிபார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதள சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து விழுந்த தொழிலாளிகள்
இதனால் அவர் மயங்கி பாதள சாக்கடையின் உள்ளே விழுந்தார். இதை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை காப்பாற்றும் முனைப்பில் அவரும் பாதாள சாக்கடையை எட்டிப்பார்த்தார். அப்போது விஷவாயு அவரையும் தாக்கியது. இதனால் அவரும் பாதாள சாக்கடை கால்வாயின் உள்ளே விழுந்தார். இதை பார்த்தவர்கள் உடனே மாதவரம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொழிலாளி பலி
இதையடுத்து விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை வீரர்கள் உரிய பாதுகாப்புடன் இருவரையும் மீட்க முயன்றனர். இதில் நெல்சன் சடலமாக மீட்கப்பட்டார். ரவிக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து ரவிக்குமார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் நெல்சனின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் மற்றும் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மாதவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications