அதிர்ச்சி.. விஷவாயு தாக்கியதால் அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளிகள்! ஒருவர் பலி.. மற்றவருக்கு சிகிச்சை
சென்னை: வடசென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை அடைப்பை சரிசெய்தபோது விஷ வாயு தாக்கி 26 வயது தொழிலாளி ஒருவர் பலியானார். இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (வயது 26). இவர் சென்னையில் மாதனான்குப்பத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் ஜெட்ராட் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வடசென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பை ஜெட்ராட் இயந்திரம் மூலம் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது.

விஷவாயு தாக்குதல்
இதையடுத்து பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஜெட்ராட் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது நெல்சன் பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே எட்டிபார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதள சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து விழுந்த தொழிலாளிகள்
இதனால் அவர் மயங்கி பாதள சாக்கடையின் உள்ளே விழுந்தார். இதை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை காப்பாற்றும் முனைப்பில் அவரும் பாதாள சாக்கடையை எட்டிப்பார்த்தார். அப்போது விஷவாயு அவரையும் தாக்கியது. இதனால் அவரும் பாதாள சாக்கடை கால்வாயின் உள்ளே விழுந்தார். இதை பார்த்தவர்கள் உடனே மாதவரம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொழிலாளி பலி
இதையடுத்து விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை வீரர்கள் உரிய பாதுகாப்புடன் இருவரையும் மீட்க முயன்றனர். இதில் நெல்சன் சடலமாக மீட்கப்பட்டார். ரவிக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து ரவிக்குமார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் நெல்சனின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் மற்றும் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மாதவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications