Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடு முட்டியதாலே இறக்கல.. அந்த பெரியவருக்கு பிபி, சுகர் இருந்துச்சி.. மேயர் பிரியா சொன்ன விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவல்லிக்கேணியில் சுந்தரம் என்ற முதியவர் மாடு முட்டி மட்டுமே இறக்கவில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரத்தான முகாமை தொடங்கி வைத்த மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில் திருவல்லிக்கேணியில் மாடு முட்டிய சுந்தரத்திற்கு ஏற்கெனவே உடல்நல பிரச்சினைகள் இருந்து வந்தது. ஏற்கெனவே அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மாடு முட்டிய சுந்தரத்திற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது.

Chennai mayor priya says how cow attacked elder man in triplicane died?

மாடு முட்டியதால் சுந்தரம் மிகவும் பயத்திலேயே இருந்துள்ளார். 80 வயது என்பதால் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாடு முட்டியதுதான் இறப்பிற்கு காரணம் என நாம் சொல்லிவிட முடியாது. அவருக்கு உடல்நல பிரச்சினைகளும் இருந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை பெற்று பின்னர் அறிவிக்கப்படும்.

மாடுகளை உரிமையாளர்கள் சாலையில் விடுகிறார்கள். அப்படி விடும்போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதனால் நாங்கள் தற்போது அபராதத் தொகையையும் அதிகரித்துள்ளோம். முதல் முறை சாலையில் மாடு பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ 5000 அபராதம், 2ஆவது முறை பிடிபட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.

இப்படி அபராதம் விதித்தே மாநகராட்சிக்கு ரூ 78 லட்சம் வசூலாகியுள்ளது. எனவே முதல்வருடன் ஆலோசனை நடத்தி மாடுகள் மூன்றாவது முறை பிடிபட்டால் நாங்கள் ஒரு இடம் பார்த்து அந்த மாடுகளை அங்கே பிடித்து வைக்க போகிறோம். அதற்கு தேவையான உணவுகளை மாட்டின் உரிமையாளர் அந்த இடத்திற்கு வந்து தீவனங்களை கொடுத்துவிட்டு பால் கரந்து விட்டு செல்லும் வகையில் அமைக்க போகிறோம். மாடுகள் நடந்தால்தான் பால் கரக்கும் என்பதால் இதுபோல் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளுக்கு மாடுகளை விட்டுவிடுவதுதான் பிரச்சினையாக உள்ளது. மற்றபடி மாடுகளை வளர்க்கக் கூடாது என நாங்கள் யாரும் சொல்லவில்லை.

மாடுகளை சாலைகளில் விடுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் அறிய வேண்டும். எனவே மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். வீடுகள் தோறும், கால்வாய்களில் தினமும் இரு வேளை கொசு மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நாங்கள் விளம்பரத்திற்காக அடிக்கிறோம் என கூறுவது தவறு. அது போல் டெங்கு நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் என்பதால் வீடுகளில் தேங்கும் வகையில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி வருகிறோம். அபராதங்கள் விதிக்கிறோம். அது போல் கால்வாய்களில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பால்களை போடுகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் டிரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணிகள் கடந்த ஆண்டை போல் தொடங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.

கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வடக்கு மாட வீதியில் 80 வயது முதியவர் சுந்தரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செவித் திறனற்ற மற்றும் வாய் பேச இயலாக மாற்றுத்திறனாளியாவார்.

அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மாடு, சுந்தரத்தின் மீது முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார். அவருடைய கண் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+