Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன ஸ்பீடு.. நேரடியாக களத்திற்கே வந்தே மேயர் ப்ரியா! இதுதான் இப்போ சென்னைக்கு முக்கியம்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மேயர் ப்ரியா நேரடியாக களத்திற்கே வந்து முக்கியமான பணிகளை செய்ய தொடங்கி இருப்பது பெரிய கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த நவம்பர் - டிசம்பர் மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.

Chennai Mayor Priya started working on Monsoon Preparation in city areas ahead of rain

தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 - 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும்.

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள மழை நீர் வடிகால் அமைப்புகள் காரணமாக மழை நீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. தற்போது இந்த மழை நீர் வடிகால் அமைப்புகள் பலன் அளிக்க தொடங்கி உள்ளது. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் இன்னும் சில பகுதிகளில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் மழை காலத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி மழையில் மரங்கள் விழுவதை தவிர்க்க கிளைகளை கழிக்கும் பணிகளும், சாலை ஓரம் நீர் வெளியேற்றும் அமைப்புகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணிகளும் தொடங்கி உள்ளன.

மழை காலத்தில் காற்றில் மரங்கள் விழுவதை, சாலையில் கிளைகள் விழுவதை தடுக்க இந்த பணிகளை சென்னையில் மேயர் ப்ரியா நேரடியாக களத்திற்கே வந்து செய்து வருகிறார். இன்றில் இருந்து சென்னையில் ஒவ்வொரு ஏரியாவாக மேயர் பிரியா இந்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளார். அவரின் இந்த பணிகள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன.

Chennai Mayor Priya started working on Monsoon Preparation in city areas ahead of rain

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் மாலை நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் மழை தீவிரம் அடையும் முன் இந்த பணிகளை முடிப்பதற்கான வேளைகளில் அரசு இறங்கி உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் இன்றில் இருந்து 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சென்னையிலும் மழை பெய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+