சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Weather: தமிழகத்தில் 28-ம் தேதி முதல் மழை பெய்யும்- வானிலை மையம்- வீடியோ

    சென்னை: இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயில் சென்சுரி அடித்து வருகிறது.

    இருப்பினும் வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு! மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு!

    காற்றழுத்த தாழ்வு

    காற்றழுத்த தாழ்வு

    இந்த நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    36 மணி நேரத்தில்

    36 மணி நேரத்தில்

    அதன்படி இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

    கரையை கடக்கும்

    கரையை கடக்கும்

    காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஃபனி புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீனவர்கள்

    மீனவர்கள்

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இந்த நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    சென்னையில் ஏப்ரல் 30 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Chennai Meteorological Centre says that low depression is formed in and around Indian ocean. It will strengthen into cyclone in next 36 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X