அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும்... வானிலை மையம் அறிவிப்பு..!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஈரோடு, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் -பழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றிரவு 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பழனி-கொடைக்கானல் மலைசாலை அடைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வளிமண்டல சுழற்சியால் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை மையம்
நிவர் புயல் மற்றும் புரேவி புயல் காரணமாக தமிழகம் முழுவதுமே கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. இதனிடையே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுமையம் முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளபடி மேற்கண்ட 5 மாவட்ட மக்கள் அடுத்த 3 மணி நேரத்துக்கு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வது உகந்தது.