சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம்! கோயம்பேடு - பட் ரோடு சேவை எப்போது தொடக்கம்! ஓராண்டுக்கு முன்பே அதிரடி!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முக்கியப் பகுதியான கோயம்பேடு முதல் பட் ரோடு (பரங்கிமலை) வரையிலான 12 கி.மீ தூரப் பாதை, வரும் ஜூன் மாதம் (June 2026) திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உண்மையில் 2027 ஜூன் மாதம்தான் இதற்கான 'டெட்லைன்'. ஆனால், பணிகளை விரைவுபடுத்தி ஓராண்டுக்கு முன்பே இதை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சி.எம்.ஆர்.எல் (CMRL) முடிவு செய்துள்ளது.

இந்த வழித்தடத்தின் சிறப்பம்சங்கள்
எந்தப் பகுதி?: இது மாதவரம் - சோழிங்கநல்லூர் (Corridor-5) வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இதில் மொத்தம் 13 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.
பயனடையப் போகும் பகுதிகள்: விருகம்பாக்கம், மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதி மக்கள் இனி நகரின் மையப்பகுதிக்கு எளிதாகச் சென்று வரலாம்.
'டபுள் டக்கர்' இணைப்பு: ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய 4 நிலையங்களில், இந்த ரயில் பாதை பூந்தமல்லி - வடபழனி பாதையுடன் இணைகிறது.
ஸ்கைவாக் வசதி: கோயம்பேட்டில் 2-ம் கட்ட நிலையத்தை, ஏற்கனவே உள்ள 1-ம் கட்ட நிலையத்துடன் இணைக்கப் புதிய நடைமேம்பாலம் (Skywalk) அமைக்கப்படவுள்ளது.
யாருக்கு லாபம்?
ஐடி ஊழியர்கள்: போரூர் ஐடி காரிடார் (Porur IT Corridor) செல்பவர்களுக்குப் பெரிய நிம்மதி கிடைக்கும்.
வியாபாரிகள்: கோயம்பேடு மார்க்கெட் செல்பவர்கள் மற்றும் சென்னை வர்த்தக மையத்திற்கு (Trade Centre) வருபவர்களுக்குப் பயணம் எளிதாகும்.
டிராஃபிக் இருக்காது: மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் பீக் ஹவர்ஸில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
b 2-ம் கட்டத்தின் முதல் சேவையான பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி இடையிலான 14.5 கி.மீ தூரப் பாதை, வரும் பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications