Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூடப்பட்டிருக்கும் கதவை திறந்தால்.. ரூ.5000 வெச்சுக்குங்க.. இந்த நம்பரை நோட் பண்ணுங்க.. சென்னை மெட்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீக் ஹவர் என்று சொல்லப்படும் நேரத்தில், மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் சிலர் அத்துமீறிவிடுவதால், முக்கிய எச்சரிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

Chennai Metro Train and Big warning to rules violate passengers 4 years Jail sentence

மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ நிறுவனமும் பல்வேறு வசதிகளையும், புதுபுது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.. எனினும், நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அலுவல் நேரங்களில் காலை மாலை இருவேளைகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் கூட்ட நெரிசல் காணப்படுகிறது..

பீக் ஹவர்ஸ்: இந்த நெரிசல் காரணமாக, ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிடுகிறது.. சிலசமயம், ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களும் பயணிகளால் ஏற்படுகிறது.

மேலும் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக, கதவுகள் மூடப்பட்டவுடனேயே, கதவுகளை திறக்க பயணிகள் முயற்சிப்பது , தானியங்கி கதவுகள் மூடும்போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது இப்படியான ஆபத்தான செயல்களிலும் பயணிகள் ஈடுபடுவதாகவும், இதனால் அலுவல் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Chennai Metro Train and Big warning to rules violate passengers 4 years Jail sentence

கடும் எச்சரிக்கை: அதுமட்டுமல்ல, பயணிகளால் ஏற்படும் இத்தகைய சூழ்நிலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது,

அதன்படி, ரயிலின் இயக்கத்தை தடுப்பது, தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, 4 வருடங்கள் வரை ஜெயில் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.. இதைத்தவிர, ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதற்காகவே, பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மெட்ரோ அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால்,...பயணியர் வாடிக்கையாளர் உதவி எண் 18604251515க்கு உடனடியாக தெரிவிக்கலாம்.

கனமழை: ஏற்கனவே, சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க புகார் எண் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதல், ஆங்காங்கே குடிநீரில் மழை கழிவுநீர் கலக்கப்படுவதாக புகார் கிளம்பியது.

இதனையடுத்து, குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம், அறிவித்திருந்ததுடன், 044 4567 4567 என்ற புகார் எண் அல்லது கட்டணமில்லா எண்ணான 1916-ஐ அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இப்போது, மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், 18604251515 என்ற நம்பருக்கு புகார் தரலாம் என்று பொதுமக்களை மெட்ரோ கேட்டுக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+