சொந்த மகளை விபச்சாரத்தில் தள்ளி.. சிறுமியின் தோழிகளையும் விடாத சென்னை மயிலாப்பூர் பெற்றோர்.. துயரம்
சென்னை: பணத்துக்காக மகளை பாலியல் தொழிலில் தள்ளி, அதனை வீடியோவாகவும் எடுத்து சம்பாதித்துள்ளனர் சென்னை மயிலாப்பூர் தம்பதிகள்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்திவரும் நிலையில், மகளின் தோழிகளையும் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அவைகளையும் வீடியோ எடுத்து விற்பனை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது..
சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தன்னுடைய செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஆய்வுகள்: இந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது செல்போனையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான், அதில், தன்னுடைய 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளது கண்டறியப்பட்டது. அத்துடன், மேலும், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் செல்போனில் இருந்துள்ளது.
இந்த வீடியோக்களை எல்லாம், சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையும் செய்து வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், கைதான நபருக்கு, அவரது மனைவியே உடந்தையாகவும் இருந்துள்ளார். கோட்டூர்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் இவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெற்றோர்: பெற்றோர் சம்மதத்துடன் நடந்துள்ள இந்த பாலியல் விவகாரம் ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஒருவர், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர். இன்னொருவர், தாம்பரத்திதில் வசித்து வருபவராம்.
ஆபாச வீடியோவில் உள்ள அந்த சிறார்கள் யாரென்று தெரியவில்லை.. எனவே அந்த பிள்ளைகள் யாரென்ற விசாரணயை போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.. அப்போதுதான், இந்த பாலியல் தொழிலில் மேலும் 6 பள்ளி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. சொந்த மகளை மட்டுமின்றி, மகளின் தோழிகளையும் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அவைகளை வீடியோ எடுத்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது..
பள்ளி மாணவிகள்: வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள்..
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், போலீசாரின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications