4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவடி ஹவுஸிங் போர்டு பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டதால், கொந்தளித்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை ஆவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் டென்ஷனாகியிருக்கின்றனர்.

Avadi electricity

நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் டென்ஷனாகியிருக்கின்றனர். மின்வெட்டு சரி செய்யப்படாததால், இன்று அதிகாலை ஆவடியில் வாகனங்களை மறித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றிருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

என்னதான் பிரச்சனை?

தமிழகத்தின் மின்சார தேவை 21000 மெகாவாட். இது கோடை காலத்தில் 23000 மெகாவாட் ஆக அதிகரிக்கும். தற்போது தமிழகத்தில் மின்சார வாரியத்தின் மூலம் 8000 மெகாவாட் மற்றும் சூரிய ஒளி, காற்றாலை மற்றும் மத்திய அரசின் ஒதுக்கீடு மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்தின் அளவு 6000 ஆக இருக்கிறது. மொத்தம் சேர்த்தால் 14000 மெகாவாட்தான் வருகிறது. மீதமுள்ள 9000 மெகாவாட் மின்சாரத்தை வெளியிலிருந்துதான் வாங்குகிறோம். புதியதாக அமைந்த தவெக அரசு, ஒப்பந்த அடிப்படையில் மின் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறது.

இதுதான் மின்வெட்டுக்கு முதன்மை காரணம். அதேபோல மின் விநியோக கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகளும் இதற்கு மற்றொரு காரணம் என்று மின்வாரிய ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் கம்பிகளை மாற்றுவது, புகார்களை சரி செய்வது, மின் கம்பிகளுக்கு குறுக்கே உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். ஆனால், இந்த முறை தேர்தல் காரணமாக இந்த பணிகள் நடக்கவில்லை. மட்டுமல்லாது, மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இருப்பதால், அவர்கள் உயிரை கொடுத்து வேலை செய்ய தயங்குகிறார்கள்.

எனவே இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+