சென்னை புறநகர்களில் வடியாத வெள்ளம்.. அடுத்தடுத்து மழையும் வருது.. சொந்த ஊர் செல்லும் மக்கள்
சென்னை: நிவர் புயல் ஓய்ந்த நிலையில் வெள்ளநீர் வடிய சில நாட்களாகும் என்பதால் சென்னை மக்கள் பலர் சொந்த ஊருக்கு படை எடுக்கிறார்கள், நேற்று மாலை குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பலரும் முண்டியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிவர் புயல் காரணமாக கிட்டத்தட்ட 3 நாளில் 60 செமீக்கு மேல் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முழுவதும் கிடைக்க வேண்டிய மழையில் பெரும் பகுதி கடந்த சில நாளில் சென்னையில் பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது.

புறநகர்
நிவர் புயல் கரையை கடந்த நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை தாம்பரத்தில் 31 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் 27 செமீ மழை பெய்துள்ளது. கனமழையால் தாம்பரம், முடிச்சூர், உள்பட சென்னையின் புறநகர் பகுதிகள் கடும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளநீர் மெதுவாக வடிந்து வருவதால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் அவதி
வேளச்சேரி, தரமணி, வியாசர்பாடி, ஆர்கே நகர், தண்டையார்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும், அடையாறு கரையோர பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் வீடுகள் தத்தளிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சொந்த ஊர்
இந்நிலையில் நேற்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திடீரென இரண்டு நாள் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த சென்னைவாசிகள் பலர் நேற்று கோயம்பேட்டில் குவிந்தனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் போட்டிபோட்டு ஏறி சொந்த ஊர் சென்றனர். வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு பலர் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

மக்கள் அச்சம்
இதனிடையே புரெவி புயலுக்கான காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்ககடலில் வரும் 29ம் தேதி உருவாகிறது. அந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. பொதுவாக தெற்கு வங்ககடலில் புயல் உருவானால் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும் என்பதால், இந்த புயலால் சென்னைக்கும் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிவர் ஓய்ந்த நிலையில் அடுத்தடுத்து மழை பெய்ய தொடங்கினால் மக்கள் அவதிக்குள்ளாக நேரிடும் அபாயமும் உள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications