கள்ளக்காதல்.. ஆபாச படம் எடுத்து வைத்து சென்னை தொழிலதிபரின் மனைவியை மிரட்டிய வாலிபர்!
சென்னை: ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என சென்னையில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (35), தொழிலதிபர். இவரது மனைவி மீனா (32). ( இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். மீனா தனது கணவருடன் சேர்ந்து கார் இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது அலுவலகத்தில் ஊழியராக ரத்தினகுமார் (28), என்ற இளைஞர் பணிபுரிந்தார். மீனாவும் ரத்தினகுமாரும் நெருங்கி பழகியுள்ளார்.

முன்னாள் காதலன்
அப்போது, மீனா தனது குடும்ப விவகாரங்கள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட ரத்தினக்குமார் ஆறுதல் கூறுவது போல் பேசியுள்ளார். இதை நம்பி அனைத்தையும் உளறிய மீனா ஒரு கட்டத்தில், முன்னாள் காதலனுடன் திருமணத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்ததையும் ரத்தினகுமாரிடம் தெரிவித்திருக்கிறார்.

அடிக்கடி உல்லாசம்
இதனிடையே இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. அதை செல்போனில் ரத்னகுமார் படம் பிடித்துள்ளார்.. இதை கூறி மீனாவிடம் அடிக்கடி பணம் கேட்டு ரத்தினகுமார் தொல்லை செய்திருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த மீனா
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, கணவருக்கு தெரியாமல் முடிந்த வரை பணம் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று மீனா மறுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ரத்தினகுமார், ‘‘நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால், உனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்,'' என்று மிரட்டியிருக்கிறார்.

போனில் ஆபாச படங்கள்
இதனால், செய்வதறியாது மீனா தவித்து வந்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் ராஜா அவரது செல்போனை எடுத்து, ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்'' மூலம் சோதனை செய்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்களும், வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மீனாவிடம் கேட்டபோது, ரத்தினகுமார் தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உண்மையை கூறியிருக்கிறார்.

கைது செய்த போலீஸ்
அத்துடன் கள்ளக்காதலையும் ஒப்புக்கொண்டார். அத்துடன் ஆபாசமாக படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டுவதையும் கணவனிடம் மீனா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினகுமாரை கைது செய்து செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications