சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
சென்னை: ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் 5 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
கடத்தப்பட்ட குழந்தையை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் மீட்டிருக்கின்றனர். குழந்தையை கடத்தியதாக கொடுங்கையூரை சேர்ந்த ரோஸ்மேரி என்பவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த 13ம் தேதி கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட வெளியே வந்தபோதுதான், அவரை அழைத்து செல்ல வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்திருக்கிறார். அப்போது அவருக்கு உதவுவதை போல வந்த பெண் ஒருவர், குழந்தையை நைசாக கடத்தி சென்றிருக்கிறார்.
இதனையடுத்து தாய் உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர்கள், குழந்தையுடன் சந்தேகம்படும்படி இருந்த ஆட்களை அடையாளம் கண்டு தேட தொடங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற தேடுதலில் குழந்தையை கடத்திய ரோஸ்மேரி என்பவரை கைது செய்திருக்கின்றனர். 5 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!












Click it and Unblock the Notifications