Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 ரூபாய் லஞ்சம்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் அதிகாரிக்கு ஒன்றரை வருடம் சிறை.. ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு ஒரு வருடம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்த சண்முகம் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு விடுப்பு கடிதம் கொடுக்காமலும், பல நாட்கள் பணிக்கு வராமலும் இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய உயர் அதிகாரி, அவரது ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.500 வீதம் பிடித்தம் செய்து, அவரை ஓய்வு பெற அனுமதி வழங்கி 2008-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மத்திய மண்டலம் இணை காவதுறை ஆணையர் அலுவலம் மூலமாக தமிழ்நாடு அரசிடம் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உள்துறை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என்பதை தெரிந்துக் கொள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார். அப்போது, மனு மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அவரிடம் சூப்பிரண்டன்ட் அசோக்குமார் ரூ. 2ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை கொடுக்க விருப்பம் இல்லாத சண்முகம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

லஞ்ச ஒழிப்பு போலீசார் 2008-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி வழக்குப்பதிவு செய்து, லஞ்சம் வாங்கும்போது சூப்பிரண்டு அசோக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி, அசோக்குமாரை விடுதலை செய்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

10 ஆயிரம் அபராதம்

10 ஆயிரம் அபராதம்

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ''காவல்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது. எனவே, அசோக்குமாரை குற்றவாளி. அவருக்கு, 2 சட்டப்பிரிவுகளின் கீழ் ஓர் ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+