கட்டுப்பாடுகளை மீறி திருமண வரவேற்பு- நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்கு பதிவு
சென்னை: நடிகை வனிதா, கொரோனா கால லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது தொடர்பாக சென்னை போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வனிதா நடத்தி உள்ளார்.
ஊரடங்கு காலத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் அதிக ஆட்களை திரட்டியதாகவும், திருமண நிகழ்ச்சிக்காக புகைப்படம் எடுத்ததாகவும், முக கவசம் அனியவில்லை எனவும் வனிதா மீது போலீசில் புகார் கூறப்பட்டது. வனிதா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா என்பவர் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் புகார் அளித்திருந்தார்.
'நாம் ஒன்றாக சினிமாவுக்கு வந்தோம்..' இந்த வெற்றிக்கு தகுதியானவர் நீங்கள்.. அஜித்தை புகழும் வனிதா!
இந்த புகாரின் பேரில் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் நடிகை வனிதா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தம்மை அவதூறாக பேசிய சூர்யா தேவி மீது நடிகை வனிதா இதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் வடபழனி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு சூர்யா தேவி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.