சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து! 2 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக 2 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. மழைக்காக ஒதுங்கி இருந்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர்.

தீயணைப்பு துறையினரின் முயற்சியோடு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் துர்திஷ்டவசமாக, கந்தசாமி எனும் பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
ஆய்வுக்கு பின்னர் பேட்டியளித்த அவர், "பெட்ரோல் பங்கின் கூரை சரிந்து சிலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷ் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறையோ, மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர் கொண்டு இதனை துண்டித்தால் அதிலிருந்து பறக்கும் நெருப்பு துகள்கள் பெட்ரோல் பங்கில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும். இதனால் இதனை தவிர்த்திருக்கிறோம். இந்த பங்க் மேற்கூரை 16 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்களும், வீடுகளும் தங்களின் கட்டமைப்பை உறுதி செய்துகொள்வது நல்லது" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக பங்க் உரிமையாளர், மேலாளர் மீது காவல்துறையினர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனமழையால் திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகி இருப்பது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications