கோயம்பேடு மேம்பாலத்துல என்னப்பா அது.. ஒரே ஒரு ஆக்சன் தான்.. அப்ளாஸ் அள்ளிய சென்னை போலீஸ்
சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தில் புகை தள்ளியபடி போன வண்டியை ஒரே ஒரு வீடியோ எடுத்து சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து புகார் அளித்தார் நெட்டிசன் ஒருவர். உடனே ஆக்சன் எடுத்த சென்னை போலீஸ், புகை தள்ளியபடி போன வண்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதற்கான சலானையும் டுவிட்டரிலேயே சென்னை போலீசார் பதிவிட்டுள்ளனர்.
நம்மூரு மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், சிக்கினால் போலீசுடன் சண்டை தான். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ்தான் இல்லையே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் பல இடங்களில் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள்.
சிக்னல் விழுகப்போகிறது என்றால், பாய்ந்து சென்று சிவப்பு சிக்னல் விழுந்தாலும் ஏறி செல்வார்கள். இதல்லாம் இங்கு சர்வ சாதாரணம். பள்ளிக்கு குழந்தையைவிட போகும் போது ஹெல்மெட் அணிவதை பார்க்கவே முடியாது. பக்கத்து தெருவிற்கு செல்வதாக இருந்தாலோ, வீட்டு பக்கத்தில் எங்காவது செல்வதாக இருந்தாலோ பலரும் ஹெல்மெட் போடுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் குறித்து யார் போட்டோ எடுத்து அனுப்பினாலும் அல்லது வீடியோ எடுத்து அனுப்பினாலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 4 மாதங்களாக பலருக்கு ஃபைன் போடப்பட்டிருக்கிறது. ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், போக்குவரத்து விதிமீறல் குறித்து 4032 ட்விட்டுகள் கடந்த 4 மாதத்தில் பொதுமக்களால் போடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதில் 95 சதவீதம் ட்விட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேததி கோயம்பேடு மேம்பாலத்தில் புகை தள்ளியபடி போன வண்டியை, ஒரே ஒரு வீடியோ எடுத்து சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து புகார் அளித்தார் நெட்டிசன் ஒருவர். நேரம், நாள் என சரியாக குறிப்பிட்டு அனுப்பிய புகாரை ஆய்வு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை பொறுத்தி பார்த்துவிட்டு, உடனே ஆக்சன் எடுத்த சென்னை போலீஸ், புகை தள்ளியபடி போன வண்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கான சலானையும் டுவிட்டரிலேயே சென்னை போலீசார் பதிவிட்டுள்ளனர். இது போல் புகை தள்ளும் வண்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சென்னை போக்குவரத்து போலீசாரை பாராட்டி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications