பூந்தமல்லியில் "பூத்த" விஜயகாந்த்.. திருவள்ளூரில் அந்த தெருவில் நுழைஞ்சதுமே.. இதுதான் கேப்டன்.. செம
சென்னை: விஜயகாந்த்தை பற்றின நெகிழ்ச்சி செய்திகளும், அரிய சம்பவங்களும், மனதை உருக வைக்கும் நிகழ்வுகளும் தினந்தோறும் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. அப்படிதான் இப்போதும் ஒரு செய்தி பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.. பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழையில் விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்..

கதறல் அழுகை: அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள்.
மற்றொருபக்கம், விஜயகாந்த்துக்கு விருது அறிவிக்கப்பட்டுது.. குடியரசு தினத்தை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு இந்த பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்: இதுபோக, விஜயகாந்த் பெயரை, சாலைக்கு சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், எந்தவித கோரிக்கையும் விடுக்காமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல், பொதுமக்களே, தங்களது தெருவுக்கு விஜயகாந்த் பெயரை சூட்டியிருக்கிறார்கள்..
போட்டோவுக்கு மாலை: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், அருகே கீழ் மனம்பேடு என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் போட்டோவையும் அந்த தெருவில் வைத்து, அந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதையும் செய்துள்ளனர்.
கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.. கிராம மக்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications