பூந்தமல்லியில் "பூத்த" விஜயகாந்த்.. திருவள்ளூரில் அந்த தெருவில் நுழைஞ்சதுமே.. இதுதான் கேப்டன்.. செம
சென்னை: விஜயகாந்த்தை பற்றின நெகிழ்ச்சி செய்திகளும், அரிய சம்பவங்களும், மனதை உருக வைக்கும் நிகழ்வுகளும் தினந்தோறும் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. அப்படிதான் இப்போதும் ஒரு செய்தி பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.. பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழையில் விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்..

கதறல் அழுகை: அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள்.
மற்றொருபக்கம், விஜயகாந்த்துக்கு விருது அறிவிக்கப்பட்டுது.. குடியரசு தினத்தை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு இந்த பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்: இதுபோக, விஜயகாந்த் பெயரை, சாலைக்கு சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், எந்தவித கோரிக்கையும் விடுக்காமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல், பொதுமக்களே, தங்களது தெருவுக்கு விஜயகாந்த் பெயரை சூட்டியிருக்கிறார்கள்..
போட்டோவுக்கு மாலை: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், அருகே கீழ் மனம்பேடு என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் போட்டோவையும் அந்த தெருவில் வைத்து, அந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதையும் செய்துள்ளனர்.
கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.. கிராம மக்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications