சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலைய பெயர்களை மாற்றக் கூடாது.. கிளம்பியது எதிர்ப்பு
Recommended Video

சென்னை: சென்னையின் பெருமைமிக்க ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசியல்வாதிகளின் பெயரை வைக்க அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. தற்போதைய ஆளும் கட்சி அந்த கட்சிதலைவரின் பெயரையும், எதிர்கட்சிகள் அவர்களின் கட்சி தலைவரின் பெயரையும் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது.

பெயர் மாற்றம் கூடாது
இவர்கள் தங்கள் கட்சிதலைவரின் பெயரை வைக்க வேண்டுமானால் அவர்கள் கட்சி செலவில் புதிதாக ஒரு ரயில் முனையம் கட்டி அதற்கு அவர்கள் விருப்பப்பட்ட பெயரை வைத்துகொள்ளட்டும். அடுத்தவரின் குழந்தைக்கு பெயர் வைக்க நாம் போககூடாது. நமது குழந்தைக்கு நாம் பெயர்வைக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி
ஆகவே தங்கள் எதிர்ப்பை அனைவரும் பதிவு செய்யுமாறு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் எதிர்ப்பு கடிதம் அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
[email protected], [email protected], [email protected], [email protected],
[email protected], [email protected], [email protected], [email protected],
[email protected], [email protected], [email protected]

ரயில்வேதுறைக்கு கோரிக்கை
இந்த கோரிக்கையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்ற வேண்டும். தற்போது சென்ட்ரல், எழும்பூர் வராமல் இந்த இரண்டு ரயில் நிலையங்கள் மட்டுமே ஒரு சில ரயில்கள் நின்று செல்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோவிற்கு பெயர்
அதே நேரம், மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்களின் பெயரை சூட்டுமாறு குறிப்பிட்டுள்ள கடிதத்தையும் அச்சங்கம் நினைவுகூர்ந்துள்ளது.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications