சென்னையில் இந்த 3 சுரங்கப்பாதைகள் தான் சிக்கல்.. எல்லாமே கிளியர்.. எம்டிசி குட்நியூஸ்
சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் தவிர மீதி அனைத்தும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன. கணேஷபுரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கு நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. குறிப்பிட்ட இடைவெளியில் கன முதல் மிக கனமழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் உள்பட பல்வேறு சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கின. வடசென்னை பகுதியில் பெரம்பூரில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தார்கள். புளியந்தோப்பு பட்டாளம் பகுதியிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இதில் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேங்கி இருந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பெரவள்ளூர் காவல் நிலைய வளாகத்துக்குள் தண்ணீர் சூழ்ந்தது.பழைய வண்ணாரப்பேட்டையில் சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

தென்சென்னை பகுதிகளில் தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலை சந்திப்பு, டி.என்.நாயர் சாலை, பசுல்லா சாலையில், தண்ணீர் பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம் சூளைமேடு, பள்ளிசாலை, குளக்கரை சாலைகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. பள்ளிக்கரணை மேடவாக்கம் பிரதான சாலை, ஐ.சி.எப். ரெயில்வே மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகள், திருவான்மியூர் எல்.பி. சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடி பகுதி ஆகியவற்றிலும் மழை நீர் அதிகமாக தேங்கியது.
பல இடங்களில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் பழுதாகி நின்றன. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பணிகள் நடப்பதால், மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல், சாலைகளில் தஞ்சம் அடைந்தது. வாகனங்கள் அந்த நீரில் தத்தளித்தபடியே சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டது. மழை விட்டுவிட்டு பெய்ததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கிய படியே இருந்தது.. வெள்ளம் வடிவதற்கு காலஅவகாசமே இல்லாமல் தேங்கியபடியே இருந்தது,
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் இருந்த கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கியதால், அந்த பகுதிகளுக்குள் மாநகர பஸ் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் பயணிகள் இடுப்பளவு நீரில் நடந்தே வீடுகளுக்கு சென்றனர். அதேநேரம் மெட்ரோ ரயில் சேவையும், மின்சார ரயில் சேவையும் பொதுமக்களுக்கு ஓரளவு கை கொடுத்தது. இதனிடையே இன்று மழை வெள்ளம் பல இடங்களில் குறைந்துள்ளதால், வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட பல சுரங்கப்பாதைகளில் இயல்பு நிலை திரும்பியது.இந்நிலையில் சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் தவிர மீதி அனைத்தும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன. கணேஷ்புரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கு நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications