Chennai Rain: பனியில்லாத மார்கழி.. குளிரில்லாத தை.. திடீரென சென்னையில் இன்று பெய்த மழை..!
சென்னையில் திடீரென இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது
சென்னை: நம் தமிழகத்தில் மார்கழியில் போதிய குளிர் இல்லாத நிலையில், ஜனவரியிலேயே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் சமயம், கடுமையான குளிர் வாட்ட துவங்கும்.. அந்த வகையில், இந்த முறை வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ந்தேதி தொடங்கியது.
நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது... ஒருசில மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவே இருந்தாலும், இந்த ஆண்டு இயல்பான அளவை விட மழை அதிகமாகவே பெய்திருந்தது..
தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை... சூறவாளிக்காற்றும் வீசுமாம்
பனிப்பொழிவு
டிசம்பர் மாதம் துவங்கியதுமே மழை படிப்படியாக குறைய ஆரம்பித்தது.. வானம் மேக மூட்டமாகவும், தெளிவாகவும் காணப்பட்டது.. ஆனால், இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு துவங்கியது.. எப்படியும் நாட்கள் செல்ல செல்ல, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு குளிர் காணப்படவில்லை..
பனிமூட்டம்
அதிகாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியதே தவிர, குளிர் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் டிசம்பர் மாதம் பனிமூட்டமும் குறைவாகவே தென்பட்டது.. இப்போது தை மாதமே துவங்கிவிட்டது.. பனிப்பொழிவு குறைந்து வந்த நிலையில், மாறாக சென்னையில் மழை ஆரம்பமாகிவிட்டது.. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகாலையில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது..
அதிகாலை
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது... கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
ட்ரெண்டிங்
குறிப்பாக தண்டையார் பேட்டை, ராயபுரம், பாரிமுனை, அண்ணா சாலை, சேப்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது... இதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த வருடம் பனியும் இல்லாமல், குளிரும் இல்லாமல், மார்கழி மாதம் முடிந்துள்ள நிலையில், மழை பொழிவு ஆரம்பமாகி உள்ளது.. சென்னை மழை என்ற பெயரில் ட்விட்டரிலும் இணையவாசிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்..!