Vande Bharat: இனி சென்னை டூ ராமேஸ்வரம் செல்ல 8 மணி நேரம்தான் ஆகும்! ரெடியான வந்தே பாரத்!
சென்னை: சென்னையிலிருந்து ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு முன்பாக இந்த ரயில் இயக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த ரயிலால் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 8 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை வேகமாக இணைத்து, பயணிகளுக்கு விரைவான பயணத்தையும், குறித்த நேரத்தில் சென்று சேரும் வசதியையும் அளிக்கின்றன.

இதனால், இவை பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ரயில்களின் வரிசையில், தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்தை சென்னையோடு இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கோரிக்கை பல நாட்களாகவே இருந்து வந்தது.
பயணிகளின் எதிர்பார்ப்புகளை ஏற்று, சென்னை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. சமீபத்தில், இந்த புதிய ரயிலின் சோதனை ஓட்டம் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதால், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக பிரதமர் நரேந்திர மோடி இந்த வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரயில்வேயின் தற்காலிக பயண அட்டவணைப்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். மறு மார்க்கமாக, ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 600 கிலோமீட்டர் தூரத்துக்கு, சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10.25 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதால், இந்த பயண நேரம் கணிசமாகக் குறைந்து, வெறும் 8 மணி நேரத்தில் ராமேஸ்வரம் சென்றடைய முடியும். இது பயணிகளுக்கு 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு பெரிய நன்மையாக அமையும்.
சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்ட பிறகுதான், பயணக் கட்டண விவரங்கள் மற்றும் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
தற்போது வந்தே பாரத் ரயில்கள் சென்னை டூ கோவை, சென்னை - நெல்லை, மதுரை -பெங்களூர், நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications