பொங்கல் முடிந்து சென்னை திரும்புறீங்களா! குட் நியூஸ் சொன்ன ரயில்வே! டிக்கெட் ரிசர்வ் தேதியை இதுதான்
சென்னை: ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து மக்கள் செல்வதும், மீண்டும் திரும்புவதும் நெரிசல் மிகுந்த பயணமாக மாறிவிடுகிறது. இந்நிலையில் இந்த நெரிசலை குறைக்க, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. இதற்கான முன்பதிவு தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலிலிருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஜன.18) நாகர்கோவிலிலிருந்து மதியம் 1 மணிக்கு கிளம்புகிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில், மறுநாள் (ஜன.19) அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

எங்கெங்கு நின்று செல்லும்?
வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விருதாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்கிறது. வழக்கமாக இதுபோன்று சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும் என்பதால், முன்பதிவை உறுதி செய்ய சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
எப்படி முன்பதிவு செய்வது?
சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு என்பது, ரேஸுக்கு போவதை போன்றது. எனவே டிக்கெட்டை சீக்கிரம் முன்பதிவு செய்ய சில எளிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுவாக பயணிகளின் பெயர்களை டைப் செய்வதுதான் அதிக நேரத்தை எடுக்கும். எனவே, இதை தவிர்க்க.. IRCTC தளத்தில், my profile பகுதிக்கு சென்று.. Master List என்பதில் பயணிகளின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, Add passenger என்பதற்கு பதில், ஏற்கெனவே குறிப்பிட்டு வைத்திருந்த பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விரைவாக புக் செய்ய
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, யுபிஐ, கிரெடிட் கார்டு போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு பதில், IRCTC-ல் உள்ள e-Walletல் முன்கூட்டியே தேவையான பணத்தை டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது பணம் செலுத்தும் நேரத்தில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும். குறிப்பாக முன்பதிவு தொடங்குவதற்கு 5-8 நிமிடங்களுக்கு முன்னதாகவே லாகின் செய்ய ரெடியாக இருங்கள்.
அதேபோல பொது வைஃபை இணைப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இப்படி செய்வதன் மூலம் டிக்கெட் புக்கிங் சீக்கிரமாக முடிந்துவிடும். டிக்கெட்டும் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications