Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கட்டிட விபத்தில் இளம்பெண் பலி..கான்டிராக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி.. கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டிட இடிபாடுகள் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, கடந்த 28-ம் தேதி காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அண்ணா சாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஒரு பகுதி கட்டட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.

Chennai sessions court set aside bail plea of contractor in Annasalai building collapse case

இந்த இடிபாடுகள் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பத்மபிரியா (22) என்பவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த பத்மபிரியா, சென்னையில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார், ஒப்பந்ததாரர் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இதனிடையே, ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது, நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்தை இடிக்கும் முன்பு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் நடந்த போது அவர் அங்கு இல்லை என்றும் அப்துல் ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல் துறை சார்பில் ஆஜரான சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளம்பெண் உயிரிழந்திருப்பதை கருத்தில் கொண்டும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், கைது செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+