சென்னை தாம்பரம் டூ பீச்.. ரயில் பயணிகளுக்கு இலவச பஸ்.. மாற்றி யோசித்த தெற்கு ரயில்வே! பலன் கொடுக்குமா?
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டதால் தாம்பரம் - கடற்கரை இடையே காலை மற்றும் மாலையில் நெரிசல் மிக்க நேரத்தில் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது. 7 நிமிட இடைவெளியில் மொத்தம் 20 சேவைகளாக இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் பிளாட்பாரம் நம்பர் 10 மற்றும் 11 ல் பிரமாண்ட தூண்கள் எழுப்பப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து
இதனால், புறநகர் மின்சார ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கபப்ட்டு வந்த 5 மற்றும் 6 நடைமேடைகளில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதனால், ரயில் ஏற்பட்டுள்ள வழித்தட நெருக்கடியால் ரயில் சேவையையும் குறைத்துள்ளது.. மின்சார ரயில்கள் குறைப்பால் சென்னையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்கு தெற்கு ரயில்வே முறையாக திட்டமிடாததே காரணம் என்று அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. ஒருநாளும் திட்டமிட்ட நேரத்திற்கு அலுவலகங்களுக்கு செல்ல முடிவது இல்லை என்று ரயில் பயணிகளும் குமுறலை வெளிப்படுத்தினர்.
இலவசமாக பயணிக்கலாம்
இதையடுத்து, பயணிகளின் சிரமத்தை குறைக்க மாற்று வழிகளை தெற்கு ரயில்வே கையில் எடுத்துள்ளது. இதன்படி, ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் சென்னை எம்.டி.சி பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதன்படி, வரும் 28 ஆம் தேதி முதல் காலை 6. 40 மணி முதல் 9.40 மணி வரை 7 நிமிட இடைவெளியில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமை செயலகம் பாரிமுனை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த பேருந்துகளில் ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வழியாக இயக்கப்படும்?
காலை 6.30, 6.37, 6.44, 7.05, 7.12, 7.26, 7.33, 7.40,7.54, 8.01, 8.15,8.22, 8.29, 8.43 ஆகிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக செல்லும்.
6.51, 7.19. 7.47,8.08,8.36, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிஸ் வழியாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கூடுதல் மின்சார ரயில்கள்
மறுமார்க்கத்தில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒருமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 20 டிரிப்புகள் இயக்கப்படுகின்றன. அதுபோக, தாம்பரம் - சென்னை பீச் இடையே இயக்கப்படும் 5 மின்சார ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் கூட்ட நெரிசல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மாலை 5.15, 5.30, 6.10, 7.10, 8 மணி ஆகிய நேரங்களிலும் தாம்பரம் - கடற்கரை இடையே காலை 6.40, 7.10, 8.10, 8.55, 9.15 ஆகிய நேரங்களில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்றி யோசித்த ரயில்வே
ரயில் பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே மாற்றி யோசித்து இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனினும், இது எந்த அளவு கை கொடுக்கும் என்று இயக்கப்பட்ட பிறகே தெரியும் என பயணிகள் கூறியுள்ள்னர்.
ஏனெனில், பேருந்துகளில் கடுமையான டிராபிக் ஜாம் இருக்கும் என்பதால்தான் ரயில்களில் செல்வோம். எனவே, பேருந்து சேவையை விட முடிந்த அளவு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications