சென்னை தாம்பரம் டூ பீச்.. ரயில் பயணிகளுக்கு இலவச பஸ்.. மாற்றி யோசித்த தெற்கு ரயில்வே! பலன் கொடுக்குமா?
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டதால் தாம்பரம் - கடற்கரை இடையே காலை மற்றும் மாலையில் நெரிசல் மிக்க நேரத்தில் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது. 7 நிமிட இடைவெளியில் மொத்தம் 20 சேவைகளாக இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் பிளாட்பாரம் நம்பர் 10 மற்றும் 11 ல் பிரமாண்ட தூண்கள் எழுப்பப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து
இதனால், புறநகர் மின்சார ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கபப்ட்டு வந்த 5 மற்றும் 6 நடைமேடைகளில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதனால், ரயில் ஏற்பட்டுள்ள வழித்தட நெருக்கடியால் ரயில் சேவையையும் குறைத்துள்ளது.. மின்சார ரயில்கள் குறைப்பால் சென்னையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்கு தெற்கு ரயில்வே முறையாக திட்டமிடாததே காரணம் என்று அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. ஒருநாளும் திட்டமிட்ட நேரத்திற்கு அலுவலகங்களுக்கு செல்ல முடிவது இல்லை என்று ரயில் பயணிகளும் குமுறலை வெளிப்படுத்தினர்.
இலவசமாக பயணிக்கலாம்
இதையடுத்து, பயணிகளின் சிரமத்தை குறைக்க மாற்று வழிகளை தெற்கு ரயில்வே கையில் எடுத்துள்ளது. இதன்படி, ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் சென்னை எம்.டி.சி பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதன்படி, வரும் 28 ஆம் தேதி முதல் காலை 6. 40 மணி முதல் 9.40 மணி வரை 7 நிமிட இடைவெளியில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமை செயலகம் பாரிமுனை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த பேருந்துகளில் ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வழியாக இயக்கப்படும்?
காலை 6.30, 6.37, 6.44, 7.05, 7.12, 7.26, 7.33, 7.40,7.54, 8.01, 8.15,8.22, 8.29, 8.43 ஆகிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக செல்லும்.
6.51, 7.19. 7.47,8.08,8.36, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிஸ் வழியாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கூடுதல் மின்சார ரயில்கள்
மறுமார்க்கத்தில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒருமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 20 டிரிப்புகள் இயக்கப்படுகின்றன. அதுபோக, தாம்பரம் - சென்னை பீச் இடையே இயக்கப்படும் 5 மின்சார ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் கூட்ட நெரிசல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மாலை 5.15, 5.30, 6.10, 7.10, 8 மணி ஆகிய நேரங்களிலும் தாம்பரம் - கடற்கரை இடையே காலை 6.40, 7.10, 8.10, 8.55, 9.15 ஆகிய நேரங்களில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்றி யோசித்த ரயில்வே
ரயில் பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே மாற்றி யோசித்து இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனினும், இது எந்த அளவு கை கொடுக்கும் என்று இயக்கப்பட்ட பிறகே தெரியும் என பயணிகள் கூறியுள்ள்னர்.
ஏனெனில், பேருந்துகளில் கடுமையான டிராபிக் ஜாம் இருக்கும் என்பதால்தான் ரயில்களில் செல்வோம். எனவே, பேருந்து சேவையை விட முடிந்த அளவு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications