வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. மூட்டை முடிச்சுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் புறநகர் மக்கள்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.
நிவர் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை கொட்டி வருகிறது. இன்று மாலை அதி தீவிர புயலாக மாறும் என்பதால் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே புறநகர் பகுதிகளில் பேய் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இத்துடன் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும் நிரம்பிவிட்டது.

குடியிருப்பு
இதனால் அதிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வெளியேற வழியில்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்தது. நேற்று மாலை முதலே புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்துள்ளார்கள். இதனால் இரவு நேரத்தில் சமைக்க முடியாமல் வீட்டில் உள்ள பொருட்களை பத்திரப்படுத்தி வருகிறார்கள்.

அடையாள அட்டை
இன்னும் மோசமான கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பணம், நகை, அடையாள அட்டைகள், குழந்தைகளின் புத்தகங்கள் உள்ளிட்டவற்றுடன் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள். இவர்கள் வேறு இடங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு தஞ்சமடையத் தொடங்கிவிட்டார்கள்.

மழை ஓய்வு
நாளையும் மழை தொடரும் என்பதால் இந்த தண்ணீர் வடிய எப்படியும் ஒரு வாரம் ஆகும் என்பதால் அதுவரை வேறு எங்காவது தங்கிக் கொள்ளலாம் என மக்கள் முடிவு செய்துவிட்டு மழை அவ்வப்போது ஓய்வெடுக்கும் நேரங்களில் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

செலவு
கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் இந்த நிவர் புயலால் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டு மேலும் செலவை ஏற்படுத்தும் எப்படி சமாளிப்பது என வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications