Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரத்தில் யார் பாருங்க? திடீர்னு ஒரே இடத்தில் மாறி மாறி அதிரடி.. திமுக, அதிமுகவால் விழித்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரத்தில் அதிமுக, திமுக தரப்பினரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த சலசலப்பினால், பரபரப்பும் தொற்றி கொண்டுள்ளது. என்ன காரணம்?

நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.. ஆனால், அதிமுகவோ அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.. அதிமுகவின் தோல்விக்கு சில காரணங்களை அடுக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Chennai Tambaram vote bank AIADMK DMK Tamil Nadu lok sabha election results Edappadi Palanisamy DMK Government

குறிப்பாக, "கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட, 2024-ம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம்... இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும்.. ஆனால், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனியாக 33.52% வாக்குகள் பெற்றிருந்தநிலையில், இப்போது 2024 தேர்தலில் வெறும் 26.93% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதாவது 6.51% வாக்குகள் குறைந்துள்ளது.

2019 தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 53.29 சதவீதமாகும்.. 2024 தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 46.97 சதவீதமாகும்.. எப்படி பார்த்தாலும், கடந்த தேர்தலை விட 6.32% வாக்குகள் திமுகவுக்கு குறைந்துள்ளது. அப்படியானால், தமிழகத்தில் அதிமுக வாக்கு சதவிகிதம் மட்டும்தான் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி காரணம் தெரிவித்திருக்கிறார்.

Chennai Tambaram vote bank AIADMK DMK Tamil Nadu lok sabha election results Edappadi Palanisamy DMK Government

டெபாசிட்: அதாவது, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருக்கும் நிலையில், அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று எடப்பாடி கூறியிருக்கிறார். இதைத்தான் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.. போஸ்டர் அடித்து ஒட்டி, வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

Chennai Tambaram vote bank AIADMK DMK Tamil Nadu lok sabha election results Edappadi Palanisamy DMK Government

அந்தவகையில், தாம்பரத்திலும் அதிமுகவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.. இதை பார்த்ததுமே திமுக தரப்பிலும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் தாம்பரத்தில் ஒட்டப்பட்டு வருகின்றன.

தாம்பரம்: தாம்பரத்தில் வெற்றி பெற்ற திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களில், "4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி" என்று அச்சிடப்பட்டுள்ளது.

அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்... 2026ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி அமைய அயராது உழைப்போம்" என்று அச்சிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் அதிமுகவும், திமுகவும் நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்கள்.

ரத்தத்தின் ரத்தங்கள்: "இந்த தேர்தலில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளதால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் அதிமுக உணர்த்தும்" என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

"ஆட்சி பொறுப்பேற்று இந்த 3 வருடமும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.. இந்த மக்கள் நலத்திட்டங்களால்தான் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது" என்கிறார்கள் உடன்பிறப்புகள். இப்படி ரத்தத்தின் ரத்தங்களும், உடன்பிறப்புகளும், மாறி மாறி காரணம் சொல்லி போஸ்டர்களை ஒட்டிவருவதால் தாம்பரத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+