சென்னைக்கு பேட் நியூஸ்.. நாளை முதல் வெப்பம் தகிக்கும்.. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸிலிருந்து 38 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடமாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

ட்விட்டர்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 36 டிகிரியிலிருந்து 38 டிகிரிக்கு செல்லும். நாளை தென் கேரளா, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யும்.

வெப்பச்சலன மழை
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வெப்பச்சலன மழை குறைவாகவே இருக்கும். சென்னை, வட தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளிலும் அனல் காற்று வீசும். வரும் 11 அல்லது 12 ஆம் தேதி முதல் மேற்கு கடலோர பகுதிகளில் பருவமழை வேகமெடுக்கும்.

புதிய காற்றழுத்தம்
வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும். இந்த காற்றழுத்தம் உருவாகிவிட்டால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு கடலோர பகுதிகளிலும் மழை அதிகரிக்கும். உள்மாவட்டங்களிலும் தமிழக கடலோர மாவட்டங்களிலமும் வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை குறைவாகவோ இல்லை பெய்யாமலோ இருக்கும் என தெரிவித்தார்.

கொளுத்தும் வெயில்
தற்போது பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அதிக வெப்பத்தால் அவதியடைந்து வருகிறார்கள். எந்த நேரமும் ஏசியை உபயோகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications