Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலைக்கு போறீங்களா! சென்னை டூ கோட்டயம் வந்தே பாரத் நாளை முதல் இயக்கம்! எங்கெல்லாம் நிற்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலனுக்காக சென்னையிலிருந்து கோட்டயத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 34 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

Chennai to Kottayam Vande Bharat Express trains are operated from tomorrow

பாதுகாப்பு வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவைகளுக்காக மக்கள் இந்த ரயிலை விரும்புகிறார்கள். ஆனால் இதில் கட்டணம் அதிகம் என்பதும் ஒரு கவலையாக உள்ளது. முக்கியமாக இந்த ரயில்களில் சென்றால் பயண நேரம் குறையும்.

இந்த ரயில்கள் மக்களின் சாய்ஸாக இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னை சென்ட்ரல்- மைசூரு, சென்னை சென்ட்ரல்- கோவை, சென்னை சென்ட்ரல்- விஜயவாடா, சென்னை எழும்பூர்- நெல்லை என 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. அடுத்தகட்டமாக கோவை - பெங்களூரு, சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்- கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 06151 கொண்ட எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 15, 17, 22, 24 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இது சென்னை சென்ட்ரலில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, போடனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டயத்தில் இருந்து சபரிமலைக்கு 95 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகள், கார்கள் மூலம் சாலை வழிப் பயணத்தை மேற்கொள்ளலாம். இரண்டரை மணி முதல் 3 மணி நேரத்திற்குள் சென்று விடலாம். ஆனால் வாகனங்களில் சபரிமலைக்கு செல்வோர் பம்பை வரை அனுமதிக்கப்படுவர்.

அதன்பிறகு அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து சபரிமலைக்கு சென்று ஐயனை தரிசிக்க வேண்டும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒரு சிறுமியும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.

அது போல் பம்பையில் தனது தந்தை காணாமல் போனதால் சிறுவன் ஒருவன் போலீஸாரிடம் கையெடுத்து கும்பிட்டு தந்தையை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதால் போலீஸாருக்கும் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் குறைந்த அளவில் இருப்பதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கார்த்திகை மாதம் பக்தர்கள் அதிகம் குவிவதையொட்டி தமிழக பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேரள தலைமை செயலாளர் வேணுவிடம் தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். இதையேற்று தமிழக பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை கேரள தலைமைச் செயலாளர் வேணு செய்துக் கொடுத்துள்ளார். இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+