Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அய்யோ காப்பாத்துங்க.. அந்தரத்தில் தவிக்க விட்ட ராட்டினம்.. அலறிய மக்கள்! விஜிபியில் விபரீதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பிரபலமான பொழுதுபோக்கு தளமான விஜிபி பார்க்கில் ராட்சத ராட்டினத்தில் சிக்கி 3 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை அடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர்.

சென்னையில் முக்கிய சுற்றுலா தளங்களாக மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல தளங்கள் இருக்கிறது. சென்னை நகருக்கு வெளியே மக்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் பகுதியாக ஈசிஆர் சாலையில் விஜிபி இருக்கிறது.

மரைன் கிங்டம், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விஜிபி சுற்றுலா மையத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று வருகின்றனர்.

Chennai VGP accident

இந்த நிலையில் விடுமுறை முடிவடைய இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் ராட்சத ராட்டினம் ஒன்றின் மேல் 30க்கும் மேற்பட்டோர் சவாரி செய்தனர். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தரத்தில் ராட்டினம் நின்றது. சிறிது நேரத்தில் சரியாகும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை.

இதனால் குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சமடைந்து சத்தமிட தொடங்கினர். மேலும் அந்தரத்தில் நின்றதால் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து அலறியதோடு, ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி ஆகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாமல் அவர்கள் ராட்டினத்திலேயே தவித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் ரத்தினத்தில் சிக்கிக் கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் விஜிபிக்கு விரைந்தனர்.

தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இந்த நிலையில் ராட்டினத்தை முறையாக பராமரிக்காமல் இயக்கியதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக விஜிபி எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஏற்கனவே ஒரு சில முறை இதே போல ராட்டினங்களால் மக்கள் அந்தரத்தில் தவித்த சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+