அய்யோ காப்பாத்துங்க.. அந்தரத்தில் தவிக்க விட்ட ராட்டினம்.. அலறிய மக்கள்! விஜிபியில் விபரீதம்!
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பிரபலமான பொழுதுபோக்கு தளமான விஜிபி பார்க்கில் ராட்சத ராட்டினத்தில் சிக்கி 3 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை அடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர்.
சென்னையில் முக்கிய சுற்றுலா தளங்களாக மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல தளங்கள் இருக்கிறது. சென்னை நகருக்கு வெளியே மக்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் பகுதியாக ஈசிஆர் சாலையில் விஜிபி இருக்கிறது.
மரைன் கிங்டம், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விஜிபி சுற்றுலா மையத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை முடிவடைய இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் ராட்சத ராட்டினம் ஒன்றின் மேல் 30க்கும் மேற்பட்டோர் சவாரி செய்தனர். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தரத்தில் ராட்டினம் நின்றது. சிறிது நேரத்தில் சரியாகும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை.
இதனால் குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சமடைந்து சத்தமிட தொடங்கினர். மேலும் அந்தரத்தில் நின்றதால் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து அலறியதோடு, ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி ஆகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாமல் அவர்கள் ராட்டினத்திலேயே தவித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் ரத்தினத்தில் சிக்கிக் கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் விஜிபிக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இந்த நிலையில் ராட்டினத்தை முறையாக பராமரிக்காமல் இயக்கியதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக விஜிபி எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஏற்கனவே ஒரு சில முறை இதே போல ராட்டினங்களால் மக்கள் அந்தரத்தில் தவித்த சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications