தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் ஐடி கார்டை காணவில்லை.. போலீசில் பரபர புகார்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்வரி முதல் இவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். இவரது அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இவருக்கான அடையாள அட்டையை மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

Chief Electoral officer Sathya Pratha Sahu’s id card missing

இந்த நிலையில் தனது அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக அதனை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப எண்ணிய சத்ய பிரதா சாகு, அதற்காக தனது அடையாள அட்டையை தனது தனி செயலாளர் சரவணன் என்பவர் மூலம் தபாலில் அனுப்புவதற்காக கொடுத்து அனுப்பியுள்ளார்.

அதன்படி சரவணன், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை தபால் நிலையத்திற்கு எடுத்து சென்ற போது தவறவிட்டுள்ளார். இதையடுத்து சரவணன், தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானது குறித்து சென்னை கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரை பெற்ற கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் தேர்தல் அடையாள அட்டையே தொலைந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+