கச்சத்தீவு விவகாரம்.. 10 ஆண்டுகளில் அதிமுக என்ன செய்தது? மு.க.ஸ்டாலின் - எடப்பாடி காரசார வாதம்!
சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் போது கச்சத்தீவை மீட்க என்ன செய்தீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு மீட்பு தொடர்பாக 54 முறை கடிதம் எழுதியதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதாவது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெறவும் மத்திய அரசு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் இந்த அரசு கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்பி-க்கள் 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும். 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்தது?
வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்கள். அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் பலமுறை பிரதமரை பார்த்த போது வலியுறுத்தியுள்ளேன். 54 முறை கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள்.
அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது கூட டெல்லி சென்று வந்தீர்கள்? அப்போது வலியுறுத்தப்பட்டதா? என்று பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை. நமது உரிமையை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications