ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி டிஸ்சார்ஜ் - 3 நாட்கள் வீட்டில் ஓய்வு
குடலிறக்க அறுவைச்சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 3 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் முதல்வர் பழனிச்சாமியை அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை: குடலிறக்க அறுவைச்சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் 3 நாட்கள் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு ஊரடங்கு, ஞாயிறு கிழமை லாக்டவுன் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ள நிலையில் வீட்டில் முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் 3 நாட்கள் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications