விவசாயம் செய்த ஜி ஜின்பிங் நாட்டுக்கு அதிபரானது எப்படி?
Recommended Video
சென்னை: தமிழக முழுவதும் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் ஜி ஜின்பிங். பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக இந்தியா வந்திருக்கிறார் அவர்.
இந்திய ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக உள்ள அவர், அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சவாலாகவும், உலகின் தனிப்பெரும் தலைவராகவும் மெல்ல உருவெடுத்து வருகிறார்.
தந்தை அரசியலில் ஈடுபட்டதால் ஜி ஜின்பிங்கிற்கும் இளம் வயது முதலே அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது.

விவசாயி
ஜி ஜின்பிங்கிற்கு விவசாயம் மீது எப்போதுமே அளவு கடந்த காதல் உண்டு. ஏனென்றால், தொடக்கக்காலத்தில் அவர் விவசாயம் செய்தவர். அதனால் விவசாயத்தொழிலில் உள்ள சிரமங்களை மறக்காமல் ராணுவம் மற்றும் உற்பத்தித்துறைக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். ஜின்பிங்கோடு பிறந்தது இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி. அவர்களில், ஜின்பிங்கிற்கு மட்டுமே தனது தந்தை ஜி ஜாங்சன் போல் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

நம்பிக்கை
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராக இருந்தவர் ஜி ஜின்பிங்கின் தந்தை ஜி ஜாங்ஸன். அவர் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் மனம் தளராத ஜி ஜின்பிங் அதே கட்சியில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார். எந்த கட்சி தனது தந்தையை நீக்கியதோ அதே கட்சியை பின்னாளில் நிர்வகிக்கும் வாய்ப்பு ஜி ஜின்பிங்கிற்கு கிட்டியுள்ளது.

துணை அதிபர்
ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால்பந்தாட்டம். இதனால் சீனப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கால்பந்தாட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாசே துங்குக்கு நிகராக தனது திறமைகளை வளர்த்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் ஜி ஜின்பிங். பியுஜியான் மாகாண ஆளுநராக இருந்த அவர், கடந்த 2008-ம் ஆண்டு சீன துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெளிப்படைத்தன்மை
2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சீன அதிபராக பதவியேற்றுக்கொண்ட ஜி ஜின்பிங் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். இதனால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவந்தார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சீன மக்கள் மத்தியில் ஜி ஜின்பிங்கிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. அதனால் அவர் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications