சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்.. நாடு முழுவதும் ஒரு சிகரெட் விலை ரூ.8.50 வரை அதிகரிப்பு!
சென்னை: நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதி இன்று முதல் அமலுக்கு வருவதால் இன்று முதல் சிகரெட்டின் விலை கடுமையாக உயர்கிறது. 40 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கலால் வரி சேர்த்து, ஒரு சிகரெட் விலை ரூபாய் 8.50 வரை உயர்கிறது.
இன்று முதல் புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தபடுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான வரி என அதிகபட்சமாக 40 % ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செஸ் வரிக்கு பதிலாக புதிய கலால் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இன்று முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது.

சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு ரூபாய் 2.05 முதல் ரூபாய் 8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ வரை நீளமுள்ள குறுகிய ஃபில்டர் இல்லாத சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 2.05 கூடுதல் வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் அதே நீளம் கொண்ட ஃபில்டர் சிகரெட்டுகளுக்கு சுமார் ரூபாய் 2.10 கூடுதல் வரி விதிக்கப்படும். 65 - 70 மிமீ நடுத்தர நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 3.60 முதல் ரூபாஉ 4 வரி விதிக்கப்படும், மேலும் 70-75 மிமீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளுக்கு சுமார் 5.40 ரூபாய் வரி விதிக்கப்படும்.
மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது. கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதி ஆண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6 - 8% அளவு குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த வரி மாற்ற நடவடிக்கை, வரி ஏய்ப்பைக் குறைத்து வருவாய் வசூலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் மசாலா உற்பத்தியாளர்கள் இப்போது பிப்ரவரி 1 முதல் புதிய சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் உள்ளடக்கிய சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு வீடியோ பதிவுகளை சேமிக்க வேண்டும். கூடுதலாக, நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உற்பத்தி திறன் குறித்து கலால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள இன்று முதல் நாடு முழுவதும் சிகரெட், பான் மசாலா பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் முன்கூட்டியே சில வியாபாரிகள் சிகரெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க உள்ளனர். மேலும், விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்ததால், புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே! -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா! -
அந்த 15 நிமிடம்.. ஒரு டின்னரில் மொத்தமாக அழிந்து போன நேபாள அரசு குடும்பம்.. என்ன நடந்தது தெரியுமா? -
பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல் -
வீட்டை விட்டு வெளியேற தடை.. ஜன்னல் பக்கம் போகாதீங்க.. கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பறந்த வார்னிங் -
"இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்" பாராட்டி தள்ளிய அமெரிக்க யூடியூபர்.. டிரெண்டிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல் -
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
இந்தியா டூ ஈரான்.. புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்.. பின்னணி












Click it and Unblock the Notifications