சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்.. நாடு முழுவதும் ஒரு சிகரெட் விலை ரூ.8.50 வரை அதிகரிப்பு!
சென்னை: நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதி இன்று முதல் அமலுக்கு வருவதால் இன்று முதல் சிகரெட்டின் விலை கடுமையாக உயர்கிறது. 40 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கலால் வரி சேர்த்து, ஒரு சிகரெட் விலை ரூபாய் 8.50 வரை உயர்கிறது.
இன்று முதல் புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தபடுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, மற்றும் பான் மசாலா மீதான வரி என அதிகபட்சமாக 40 % ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் செஸ் வரிக்கு பதிலாக புதிய கலால் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இன்று முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது.

சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு ரூபாய் 2.05 முதல் ரூபாய் 8.50 வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. 65 மி.மீ வரை நீளமுள்ள குறுகிய ஃபில்டர் இல்லாத சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 2.05 கூடுதல் வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் அதே நீளம் கொண்ட ஃபில்டர் சிகரெட்டுகளுக்கு சுமார் ரூபாய் 2.10 கூடுதல் வரி விதிக்கப்படும். 65 - 70 மிமீ நடுத்தர நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூபாய் 3.60 முதல் ரூபாஉ 4 வரி விதிக்கப்படும், மேலும் 70-75 மிமீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளுக்கு சுமார் 5.40 ரூபாய் வரி விதிக்கப்படும்.
மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை கொண்ட புகையிலை மற்றும் குட்காவிற்கு முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்படுகிறது. கூடுதல் கலால் வரிகளால், அடுத்த நிதி ஆண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6 - 8% அளவு குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த வரி மாற்ற நடவடிக்கை, வரி ஏய்ப்பைக் குறைத்து வருவாய் வசூலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பான் மசாலா உற்பத்தியாளர்கள் இப்போது பிப்ரவரி 1 முதல் புதிய சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தின் கீழ் புதிய பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் உள்ளடக்கிய சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு வீடியோ பதிவுகளை சேமிக்க வேண்டும். கூடுதலாக, நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உற்பத்தி திறன் குறித்து கலால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ள இன்று முதல் நாடு முழுவதும் சிகரெட், பான் மசாலா பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் முன்கூட்டியே சில வியாபாரிகள் சிகரெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க உள்ளனர். மேலும், விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்ததால், புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications